மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

வெறுப்பை விதைக்கும் தினமணி
சேயன் இப்ராகிம், மே 01 - 15, 2025




9.4.25 தினமணி நாளிதழின் நடுப் பக்கத்தில் டி.எஸ். தியாகராஜன் ‘அன்றே சொன்னார் பாபா சாகேப் அம்பேத்கர்’ என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை மை கொண்டு எழுதப்பட்ட கட்டுரையாகத் தோன்றவில்லை. மாறாக நஞ்சு கொண்டு எழுதப்பட்டக் கட்டுரையாகவே தோன்றுகிறது. பொய்யும், புரட்டும், வெறுப்பும் முழுமையாகக் கொண்ட கட்டுரை இது. இந்தக் கட்டுரையை எதற்காக தினமணி நாளிதழின் ஆசிரியர் வைத்யநாதன் பிரசுரித்துள்ளார் என்று நமக்குத் தெரியவில்லை. கட்டுரையாசிரியர் டி.எஸ். தியாகராஜன் யார் என்றும் நமக்குத் தெரியவில்லை. ஆனால் அவரது வெறுப்பினை உமிழும் கருத்துகளிலிருந்து அவர் இயற்கையிலேயே முஸ்லிம்கள் மீது வெறுப்பு கொண்ட ஒரு கீகுகு ஊழியர் என்பது தெளிவாகத் தெரிகிறது. தினமணி ஆசிரியர் வைத்யநாதனும் கீகுகு பின்னணியிலிருந்து வந்தவர்தான். இந்த கீகுகுகாரர்கள் மனித மாண்புகளில் நம்பிக்கை இல்லாதவர்கள்.  அவர்களிடமிருந்து வெறுப்புக் கருத்துகளை தவிர வேறென்ன நாம் எதிர்பார்க்க முடியும்?

‘வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் சிறுபான்மை ஹிந்துக்கள் அனுபவிக்கும் கொடுமைகள் சொல்லி மாளாது. இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் ஹிந்துக்களைத் தாக்குகிறார்கள் அச்சுறுத்தி மதம் மாற்றுகிறார்கள். விரட்டி அடிக்கிறார்கள்’ என பாபா சாகேப் அம்பேத்கர் குறிப்பிட்டதாக அவர் தனது கட்டுரையில் கூறுகின்றார். இது ஓர் அப்பட்டமான, உண்மை சிறிதும் கலப்பில்லாத பொய்யாகும். அம்பேத்கர் ஒருபோதும் அப்படிக் கூறியிருக்க முடியாது. இதற்கான எந்தவிதமான ஆதாரத்தையும் அவர் தனது கட்டுரையில் குறிப்பிடவில்லை. அம்பேத்கர் மறைந்து 15 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் வங்கதேசம் என்ற நாடே பாகிஸ்தானிலிருந்து பிரிந்து உருவாகியது. எனவே அம்பேத்கர் வங்கதேசம் என்று எப்படி குறிப்பிட
முடியும்? இது ஒன்றே அம்பேத்கர் சொல்லாத ஒன்றைக் கட்டுரையாசிரியர் குறிப்பிடுகின்றார் என்பதற்குத் தக்க சான்றாகும். டாக்டர் அம்பேத்கரே மதம் மாறியவர். நான் இந்துவாகப் பிறந்தேன். ஆனால் இந்துவாகச் சாக விரும்பவில்லை என்று வெளிப்படையாக அறிவித்து விட்டு 14.10.1956 அன்று இலட்சக்கணக்கான தனது ஆதரவாளர்களுடன் புத்த சமயத்தில் இணைந்தார். அம்பேத்கர் மதம் மாறியது கட்டாயத்தின் பேரிலா அல்லது மனமாற்றத்தின் பேரிலா என்பதைக் கட்டுரைஆசிரியர் விளக்குவாரா?

‘கட்டாய மதமாற்றம்’ என்று சொல் லாடலே தவறானது. கட்டாயப்படுத்தி யாரையும் மதமாற்ற முடியாது. மதமாற்றம் நிகழ்ந்ததென்றால், 700 ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம் மன்னர்களின் ஆட்சிக் காலத் தின் போது இந்தியா முழுவதுமே முஸ்லிமாக மதமாற்றம் நிகழ்ந்திருக்குமே! அப்படி ஒன்றும் நிகழவில்லையே. இன்றைக்கும் வங்கதேசத்திலும், பாகிஸ்தானிலும் இந்து சமய மக்கள் வாழ்ந்து வருகிறார்களே! கட்டாய மதமாற்றத்தில் அங்குள்ள மத அடிப்படைவாதிகளோ அல்லது அரசுகளோ ஈடுபட்டிருந்தால் இன்னமும் இந்துப் பெருமக்கள் அந்த நாடுகளில் எப்படி இருப்பார்கள்? இந்து சமயத்தில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற கோட்பாடும், சனாதன தர்மமுமே பல இலட்சக்கணக்கான மக்களை பிற சமயங்களில் சேருமாறு தூண்டியது. தங்களது சமயத்தில் கடைப்பிடிக்கப்படும் பிறப்பின் அடிப்படையில் அமைந்த உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற கோட்பாட்டை மாற்றாமல், அதனை மாற்ற விரும்பாமல், அதுவே சரி என்று வாதித்துக் கொண்டிருக்கும் பிராமணர்களின் செயல்பாடுகள் காரணமாகவே இந்தியாவில் மதமாற்றங்கள் நிகழ்ந்தன. இன்றைக்கும் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதனைத் தடுக்கவே பாஜக, மாநில அரசுகள் மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளன. எண்பது விழுக்காட்டிற்கும் அதிகமான அளவில் இந்து சமய மக்கள் வாழ்ந்து வருகின்ற இந்திய நாட்டில், அரசின் அனைத்து அமைப்புகளிலும் நூற்றுக்குத் தொன்னூறு விழுக்காடு இந்துக்கள் இருக்கின்ற நாட்டில் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்துதான் இந்து சமயத்தைக் காப்பாற்ற வேண்டியதிருக்கிறது எனில் கட்டுரையாளர் டி.எஸ். தியாக ராஜனும், அதனை வெளியிட்ட ஆசிரியர் வைத்யநாதனும் வெட்கப்பட வேண்டாமா?

வங்க தேசத்தில் ஷேக் ஹஸீனா ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர், அந்த நாட்டில் வசிக்கின்ற இந்துக்கள் தாக்கப்படுவதாகவும், அவர்களது கோயில்கள் சேதப்படுத் தப்படுவதாகவும், இது பற்றி இந்தியப் பிரதமர் மோடி, வங்கதேச அதிபர் முகம்மது யூனுஸைச் சந்தித்த போது தனது கவலையை வெளிப்படுத்தியதாகவும் தனது கட்டுரையின் தொடக்கத்தில் அவர் குறிப்பிடுகின்றார். சிறுபான்மை மக்கள் எங்கு தாக்கப்பட்டாலும், கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாலும் அது கடுமையான கண்டனத்திற்குரிய செயலே. அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஒரு நாகரிக நாட்டில் பெரும்பான்மை மக்கள் இயல்பாகவே ஆளுகின்ற உரிமையினைப் பெற்று விடுவர். ஆனால் அந்த நாட்டில் வாழுகின்ற சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமையைப் பெரும்பான்மை மக்கள் (அதாவது அரசு) உறுதி செய்ய வேண்டும்.

வங்கதேசத்தில் ஷேக் ஹஸீனா அரசை வீழ்த்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், இந்துக்களைத் தாக்கியதாகவும், இந்துக் கோயில்களைச் சேதப்படுத்தியதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. ஆனால் இத்தகைய தாக்குதல்கள் பெருமளவு நடைபெற்றதாகவோ, உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாகவோ, செய்திகள் எதுவும் வரவில்லை. எனினும் உண்மை என்னவென்றால், அந்த நாட்டின் சில இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்துக் கோயில்களைத் தாக்க முயற்சித்த போது அங்கிருந்த முஸ்லிம்களே இரவு பகலாக அவற்றுக்குப் பாதுகாப்பாக நின்றனர் என்ற செய்திகள் தினமணி உள்ளிட்ட தமிழ் நாளிதழ்களிலேயே வந்திருந்தன. வங்கதேச அரசும் வாளா விருக்கவில்லை. ஆர்ப்பாட்டக்கார்கள் மீது நடவடிக்கை எடுத்தது. 25.8.24 தேதியிட்ட தினமணி நாளிதழில் (பக்கம் 8) வங்கதேசம் ஹிந்து முஸ்லிம் இணைந்து பாதுகாத்த ஸ்ரீதாகேஸ்வரி கோயில்!’ வன்முறைக்கு இடையே மதநல்லிணக்கம்’ என்ற தலைப்பிட்ட செய்தியில் தலைநகர் டாக்காவிலுள்ள ஸ்ரீதாகேஸ்வரி கோயிலை இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றிணைந்து பாதுகாத்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தச் செய்தியில் வங்க தேசத்தின் இடைக்கால அதிபர் முகம்மது யூனுஸ், இக்கோயிலுக்குக் கடந்த 13.8.24 வருகை புரிந்து இந்து சமய மக்களிடம் உரையாடினார் என்றும், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கோயிலில் நடைபெற உள்ள பூஜையில் அந்த நாட்டின் மதம், சட்டத்துறை ஆலோசகர் ஆசிஃப் நஜ்ருல் கலந்து கொள்வார் என்று கோயில் பூஜாரியிடம் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணியில் 25.8.24 அன்று வெளிவந்த இந்தச் செய்தியை கட்டுரையாளர் டி.எஸ். தியாகராஜன் நிச்சயம் படித்திருப்பார். செய்தியை வெளியிட்ட வைத்தியநாதனும் அதனை நிச்சயம் மறந்திருக்க மாட்டார். முஸ்லிம் மத அடிப்படைவாதிகளை வங்கதேச அரசு எந்த விதத்திலும் ஆதரிக்கவில்லை. சிறுபான்மை இந்து சமய மக்களுக்குப் பாதுகாப்பாகவும், ஆறுதலாகவும் அந்த நாட்டின் அரசு செயல்பட்டுள்ளது என்பதற்கு தினமணி வெளியிட்டிருந்த செய்திகளே சான்றாகும். பாகிஸ்தானில் சிறுபான்மை இந்துக்கள் தாக்கப்படுவதாகவும் கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார். ஒரு நாகரிக அரசு தனது நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லையென்றால் அது ஒரு நல்லரசாகத் திகழ முடியாது. ஆனாலும் தினமணி நாளிதழ் 31.12.21 வெள்ளிக்கிழமையன்று 3.1.22 திங்கள்கிழமையன்று பக்கம் 9இல் வந்துள்ள செய்தியையும், கட்டுரையாளர் கவனத்திற்கும் தினமணி ஆசிரியர் கவனத்திற்கும் கொண்டு வர விரும்புகிறேன்.

31.12.21 தினமணிச் செய்தி

‘பாகிஸ்தானில் சேதப்படுத்தப்பட்ட வழிபாட்டுத் தலத்துக்கு 250 ஹிந்து யாத்ரீகர்கள் நாளை வருகை’ என்று தலைப்பிட்ட செய்தியில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது. பாகிஸ்தானில் கைபர் பக்தூன் மாகாணத்தில் தெரி என்ற கிராமத்தில் பரமாரம்சஜி மகராஜ் என்ற துறவியின் கோயில் சில முஸ்லிம் மத அடிப்படைவாதிகளால் தாக்கப்பட்டு சேதமடைந்தது. எனினும் பாகிஸ்தானின் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் உத்தரவுப்படி மேற்படி கோயில் மறுநிர்மானம் செய்யப்பட்டது.

மேலும் இந்தக் கோயிலைச் சூறையாடியவர்களிடமிருந்து 3.3. கோடி ரூபாயை வசூலிக்குமாறு உச்ச நீதிமன்றம் அந்த மாகாண அரசிற்கு உத்தரவிட்டது. புனரமைக் கப்பட்ட இந்தக் கோயிலில் வழிபடத் தான் பல நாடுகளைச் சார்ந்த இந்து யாத்ரீகர்கள் வர உள்ளனர். இதனிடையே இக்கோயிலில் பாகிஸ்தான் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சென்ற ஆண்டு தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினார். ஹிந்து சமூகத்தினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவும் பாகிஸ்தானில் பல்வேறு பகுதிகளிலிருந்து யாத்ரீகர்களை வரவேற்கவும் அவர் இந்த முயற்சியை மேற்கொண்டார். (செய்தியைச் சுருக்கமாகத் தந்துள்ளேன்.)

3.1.22 தினமணி செய்தி

மேற்குறிப்பிடப்பட்டுள்ள  கோயிலில் இந்துக்கள் வழிபட்டது குறித்து இந்தச் செய்தி பேசுகிறது. ‘கோயிலில் இந்து மக்கள் தரிசனம்’ என்ற செய்தி வெளியான நாளில் தெரி கிராமம் முழுவதும் பாகிஸ்தான் இராணுவத்தினர், உளவுப் பிரிவினர், விமான நிலையப் பாதுகாப்புப் படையினர் என 600 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்தக் கோயிலைச் சீரமைத்ததிலும், ஹிந்துக்களை வரவழைத்து வழிபடச் செய்ததலிலும் பாகிஸ்தான் அரசின் பங்கு பாராட்டுக்குரியது என ஹிந்து அமைப்பின் சட்ட விவகாரம் பொறுப்பாளர் ரோகித் குமார் கூறினார். (செய்தியைச் சுருக்கித் தந்துள்ளேன்.) தினமணியில் வந்த இந்த இரு செய்திக் குறிப்புகளிலிருந்தும் பாகிஸ்தான் அரசு மத அடிப்படைவாதிகளிடம் எங்ஙனம் நடந்து கொண்டது என்பதை அறிய முடிகிறது. இதனை மேலும் விவரிக்கத் தேவையில்லை.

மேலும் தனது கட்டுரையில் டி.எஸ். தியாகராஜன் முஸ்லிம் மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கோயில்கள் இடிக்கப்பட்டதாகவும், இந்துக்கள் துன்புறுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார். இது இந்துத்துவவாதிகள் கடந்த 75 ஆண்டுகளாகச் செய்து வரும் பரப்புரைதான். ஐந்தாவது வகுப்பு வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருக்கும் செய்திகளைத்தான் அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு நாம் பல முறை பதில் அளித்து விட்டோம். தனது வெறிபிடித்த இந்துத்துவக் கருத்துகளுக்கு டாக்டர் அம்பேத்கரைத் துணைக்கு அழைத்துள்ளார் கட்டுரையாசிரியர். அம்பேத்கர் ஒருபோதும் இந்துத்துவாக் கொள்கைகளுக்கு ஆதரவாக இருந்தவர் இல்லை. இது குறித்த எனது விரிவான பார்வையை 2025 ஜனவரி 115 இதழில் இந்துத்துவவாதிகளின் சிம்ம சொப்பனம் டாக்டர் அம்பேத்கர் என்ற கட்டுரையில் எழுதியுள்ளேன்.

டி.எஸ். தியாகராஜன் போன்ற மத வெறி யர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளித்து அதனை நடுப்பக்கத்தில் பிரசுரிப்பது தினமணி ஆசிரியருக்கு அழகல்ல. அவர் பின்பற்றுகின்ற இந்து தர்மத்திற்கும் ஏற்புடையதல்ல. அதிலும் முற்றிலும் அவதூறும், வெறுப்பும் நிறைந்த கட்டுரையை பிரசுரிப்பது, ‘நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்’ என்ற அப்பத்திரிகையின் முழக்கத்திற்கு மாறானதாகும். இது நியாயம் தானா, தர்மம் தானா, இறைவனுக்கு உகந்ததா என்ற கேள்விகளை அவரது மனசாட்சிக்கே விட்டு விடுவோம்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்