தெலுங்கானா மாநில ஆவணக்காப்பகம், ஆராய்ச்சி நிறுவனத்தில் (TSARI) தற்போது பாதுகாக்கப்பட்டுள்ள அந்தக்கால முகலாய ஆவணம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. முகலாயப் பேரரசர் ஷா ஆலம் ஐஐ, அபுல் முஸாஃபர் ஜலாலுதீன் முஹம்மது ஆகியோரால் எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்ட ஃபிர்மான் எனப்படும் 250 ஆண்டுகளுக்கு முந்தைய அரச ஆணை அது.
இந்த ஃபிர்மான், 1773 தேதியிட்டது. இது ஷிகாஸ்தா எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளது. 102 செ.மீ நீளமும் 46 செ.மீ அகலமும் கொண்ட இந்த ஃபிர்மான், அலாஹாபாத் சுபாவில் (மாகாணம்) பணியமர்த்தப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு, ‘நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கங்கை நதியில் நீராட வரும் எந்தவொரு பயணிகளிடமிருந்தும் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படக் கூடாது’ என்றும், ‘அனைத்து புனிதப் பயணச் செலவுகளையும் முகலாய அரசாங்கமே ஏற்க வேண்டும்’ என்றும் அறிவுறுத்துகிறது.
சைவ, வைணவ சமய யாத்ரீகர்களுக்கு மத சுயாட்சி எவ்வாறு அன்றைய முகலாயப் பேரரசில் வழங்கப்பட்டது என்பதை இந்த ஆவணம் எடுத்துரைத்து பல வரலாற்றுப் புரட்டுகளுக்கும், முகலாயர்கள் குறித்த தவறான பரப்புரைகளுக்கும் சாட்டையடி தந்துள்ளது.
முழுமையான செய்தியைக்காண: https://www.thehindu.com/news/national/telangana/over&250&years&old&mughal&document&throws&light&on&tax&waiver&for&pilgrims&at&allahabad/article69439862.ece/amp/