மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • அன்பிற்குரிய சமரசத்தின் டிஜிட்டல் வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:
  • இதுநாள் வரைக்கும் சமரசத்தின் இணையத்தில் முற்றிலும் இலவசமாக நீங்கள் வாசித்து வந்தீர்கள். ஆனால் வருகின்ற ஏப்ரல் மாதத்திலிருந்து டிஜிட்டல் வாசிப்பிற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய சமரசம் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. விவரங்கள் விரைவாய் அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.
  • ஆகவே, இன்றுபோல் என்றும் ஒத்துழைப்பு வழங்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

கவிதை

இறுதி வரியை எட்டாத கவிதை
அரும்பாவூர் இ.தாஹிர் பாட்சா, 1-15 பிப்ரவரி 2023


இறுதி வரியை எட்ட முடியாத
கவிதை தவிக்கிறது
கவிதைக்கு
உயிர் கொடுக்கும்
அந்த வார்த்தை
தப்பித்துக் கொண்டே இருக்கின்றது

கடும் பிரயத்தனம் செய்த பின்
கையில் சிக்குகிறது
அந்த வார்த்தை

உனக்காகவா
இந்தக் கவிதை?
அடுத்தவருக்கானதா
இந்தக் கவிதை?
கேட்டுச் சிரித்த
அந்த வார்த்தைக்குப்
பதில் அளிக்கத் தெரியவில்லை

யோசித்துக் கொண்டிருக்கையில்
அந்த வார்த்தையே சொன்னது
இது உனக்கானது அல்ல

மற்றவர்களுக்காக
புகழ்ச்சிக்கு ஆசைப்பட்டு
புனைந்து கொண்டிருக்கிறாய்


இல்லை
என் ஆன்ம திருப்திக்காகவும்
அடுத்தவரின் ஆன்மாவை
உலுக்குவதற்காகவும் என்றேன்

முடிவு தெரியா வாழ்க்கையின்
உச்சத்தை எட்டாத நீ
அடுத்தவரின் அகத்தை
சுத்திகரிக்கின்றாயோ?

கடந்து போகும் நாள்களில்
உதிர்ந்த கடமைகளைக்
கழிக்காத உன் கவிதைகள்
காகிதக் குப்பையே
எனப் பரிகசித்துத்
தப்பி ஓடியது அந்த வார்த்தை

இறுதி வரியை
எட்ட முடியாத
அந்தக் கவிதை தவிக்கிறது


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர இலக்கியம்

மேலும் தேடல்