வேதங்கள் காட்டும் பாதையில் சென்றால்
வேதனை ஏதுமில்லை என்றும்
போதனை செய்தவர் பூவுலக மீதினில்
புகழுக்குப் பஞ்சமில்லை
ஒழுக்கம் என்பது உயிரினும் மேலாய்
ஒழுகுதல் தவறுமில்லை வாழ்வில்
நெறிமுறை காத்து நெஞ்சுக்கு நீதியில்
நிலைப்பது குற்றமில்லை
திருமறை ஓதிய அருளுரை யாவையும்
தீன் மார்க்கம் வேறில்லை புவியில்
எல்லாம் வல்ல ஏகன் ஒருவனாம்
ஏற்பதில் இகழ்வில்லை
அன்பு ஒன்றே அகிலம் ஆள்வது
அழிவுக்கு வழியில்லை நாளும்
மனிதம் தழைக்க மனங்கள் செழிக்க
மதங்கள் பொருட்டில்லை
சாதி சமயத்தால் வேறுபட்டாலும்
சகோதரர் நாமெனக் கை கோர்ப்போம்
வாழும் வாழ்வில் அர்த்தம் விளங்க
வீறு கொண்டு புது சபதம் ஏற்போம்