கள்ளைக் குடியாதே ஐயா நீ
கள்ளைக் குடிக்காதே
கொள்ளை வியாதிமிகும்
கொண்ட வறிவழியும்
சன்னை மலிந்த பல
சங்கடங்கள் சூழ்ந்துவரும்
மான மழிவாகும்
மதிப்புக் குறைவாகும்
ஈன மலிவாகும்
இடரோ பெருகி விடும்
உற்ற பொருளழியும்
ஊரார் பகைவளரும்
குற்றமிகுந்த பல
கூடாவொழுக்கமுறும்
பெண்டு பிள்ளை தாயென்ற
பேத மறியாமற்
கண்டபடி திட்டிக்
கலகமிட நாட்டமாகும்
பித்தம் பிடித்தலையும்
பே#ப்பட்டி* போலுமொத்த
சித்தத் தியக்கேற்றி
சீரழிவிலாழ்த்தி விடும்
தந்தைதா# சுற்றமெலாஞ்
சஞ்சலத்தி லாழவெகு
நிந்தைத் துயருத்தி
நிருமூலமாக்கி விடும்
கண்சுழல வாயுளறக்
கைகால் தடுமாற
மண்கழல விண்சுழல
மாய மயக்க மளிக்கும்
காந்தியடிகளின் கள் எதிர்ப்பு
இயக்கத்திற்காக பாவலர் இயற்றிய
பாடல். அன்றைய கள்ளுக்கடை
மறியல் போராட்டங்களின் போது
தமிழகமெங்கும் போராட்டக்காரர்களால்
இசைக்கப்பட்டது.
ஆதாரம் : விடுதலைக் களத்தில்
முஸ்லிம்கள் கவிஞர் பாரதன்
குதுப்கான், கம்பம்