நியாயவாதிகள்
கூண்டில் நின்றார்கள்
குற்றவாளிகள்
நீதிபதிகளாக
கருப்பு அங்கிக்குள்
உண்மையைப்
புதைத்துவிட்டு
பொ#யை விற்றுக்
கொண்டிருக்கிறார்கள்
அரவுகளை
எலிகள்
வேட்டையாடுகின்றன
யானைகள்
மதம் பிடிக்காமல்
கால்கள் சோர்ந்து
மரத்துப் போ#க்
கிடக்கின்றன
அவாம் ஜனங்கள்
கொடுத்த தாக்கீதுகள்
மிக்சர் கடையில்
பக்கோடா பொட்டலம்
கட்டப்படுகிறது
கண்ணைக் கட்டியவள்
கையில் இருந்த
நெடிய துலாக்கோல்
வளைந்து விட்டன
நியாயங்களை
அநியாயங்கள்
வென்றுவிட்டதாக
கெக்கிலிகட்டி
கோசமிட்டுப் போனார்கள்
அவாம் ஜனங்கள்
இன்னும்
கூண்டிலே நின்றார்கள்