மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

அருள்வளம் நிறைந்த ரமளான்
* மௌலானா முஹம்மத் ஃபாரூக்கான் * தமிழில் : அபூ ஹானியா, 16-31 மார்ச் 2024


அருள்வளம் நிறைந்த ரமளான்


நபி(ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தின் கடைசி நாளில் ஓர் உரை நிகழ்த்தினார்கள்.

‘உங்கள் முன்னால் ஒரு கண்ணியமும் மாண்பும் நிறைந்த மாதம் ஒன்று வரவிருக்கின்றது.1 இந்த மாதம் மிகவும் அருள்வளங்கள் நிறைந்த மாதமாகும். இது எப்படிப்பட்ட மாதமெனில் இந்த மாதத்தின் ஓரிரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறப்பு வாய்ந்ததாகும்.2 அல்லாஹ் இந்த மாதத்தில் உங்கள் மீது நோன்பைக் கடமையாக்கி இருக்கின்றான். மேலும் அதன் இரவுகளில் தொழப்படுகின்ற தொழுகைகளை நஃபில் ஆக ஆக்கியிருக்கின்றான்.3 எவர் இந்த மாதத்தில் ஏதேனுமோர் நல்லறத்தைச் செய்து இறைவனின் நெருக்கத்தைப் பெற விரும்புகின்றாரோ அவர் மற்ற நாள்களில் ஃபர்ளான கடமைகளைச் செய்தவருக்கு இணையானவர் ஆவார். (அதாவது மற்ற நாள்களில் ஃபர்ளான கடமைகளைச் செய்வதால் கிடைக்கக்கூடிய நன்மை அவருக்குக் கிடைக்கும்).

இந்த மாதத்தில் ஃபர்ளான கடமைகளை நிறைவேற்றியவரின் நிலைமை எத்தகையதாய் இருக்குமெனில், மற்ற நாள்களில் எழுபது ஃபர்ளான கடமைகளை நிறைவேற்றிய வருக்கு இணையானவராக இருப்பார்.4

ரமளான் மாதம் பொறுமையின் மாதமாகும்.5 பொறுமையின் கூலி சுவனம் ஆகும். மேலும் இது ஒருவர் மற்றவருடன் பரிவோடும் கருணையோடும் நடந்துகொள்வதற்கான மாதம் ஆகும்.6 இது எத்தகைய மாதமெனில் இந்த மாதத்தில் நம்பிக்கையாளர்களுக்கான அருள்வளம் அதிகரிக்கப்பட்டு விடுகின்றது.7

இந்த நாளில் நோன்பாளி ஒருவருக்கு நோன்பு துறப்பதற்கான ஏற்பாடுகளை எவரேனும் செய்து தருவாரெனில் அவருடைய அந்த நல்லறம் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு வழிவகுக்கும். அவருடைய கழுத்தை நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பதற்கும் அது வழிவகுக்கும். அந்த நோன்பாளி நோன்பு நோற்றதால் என்ன நன்மையைப் பெறுகின்றாரோ அதே அளவு நன்மை அவருக்கும் கிடைக்கும். அதனால் நோன்பாளிக்குக் கிடைக்கிற நன்மையில் எந்தக் குறைவும் ஏற்படாது.

ஸல்மான்(ரலி) கூறுகின்றார்: (நபித்தோழர்களாகிய) நாங்கள் கேட்டோம்: ‘இறைவனின் தூதரே! இவ்வாறு நோன்பாளி நோன்பு துறப்பதற்கான ஏற்பாடு செய்கின்ற அளவுக்கு நம் எல்லோருக்கும் வசதி இல்லையே!’

நபிகளார்(ஸல்) பதிலளித்தார்கள்: ‘அல்லாஹ் இந்த நன்மையை ஒரு மிடறு பால் கொடுத்து அல்லது ஒரு துண்டு பேரீச்சம் பழம் கொடுத்து அல்லது ஒரு மிடறு தண்ணீர் தந்து நோன்பு துறக்க உதவுபவருக்கும் தருவான். மேலும் எவர் நோன்பாளிக்கு வயிறார உணவளிக்கின்றாரோ அல்லாஹ் அவருக்கு என்னுடைய தடாகத்திலிருந்து தண்ணீர் புகட்டுவான். (அந்தத் தடாகத்திலிருந்து) தண்ணீர் அருந்திய பிறகு அவருக்குத் தாகமே எடுக்காது. அந்த நிலையில் அவர் சுவனத்துக்குச் சென்றடைந்துவிடுவார்.’

இது எத்தகைய மாதமெனில் இதன் தொடக்கத்தில் ரஹ்மத் - கருணை, கிருபை இருக்கின்றது. இதன் நடுவில் மன்னிப்பும் மக்ஃபிரத்தும் இருக்கின்றது. இதன் இறுதியில் நரகத்திலிருந்து விடுதலை உள்ளது. எவர் ரமளான் மாதத்தில் தம்முடைய அடிமையிடம் சிரமமில்லாத வகையில் எளிதான வேலையை வாங்கினாரோ அல்லாஹ் அவரை மன்னித்துவிடுவான். மேலும் நரகத்திலிருந்து விடுதலை அளித்துவிடுவான்.8

அறிவிப்பாளர் : ஸல்மான் ஃபார்சி(ரலி)

நூல் : பைஹகி 

  1. மகத்துவமும் அருள்வளமும் நிறைந்த மாதம். அதாவது ரமளான் மாதமே அருள் வளங்களின் மாதமாகும்.
  2. ரமளானின் சிறப்புகள், தனித்தன்மைகள் குறித்து நபி(ஸல்) அவர்கள் பல விஷயங்

களைக் குறிப்பிட்டிருக்கின்றார்கள். ஷபே கத்ரு குறித்து ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவு என்றும் அறிவித்திருக்கின்றார்கள். அந்த அருள்வளம் நிறைந்த இரவில்தான் குர்ஆன் அருளப்படத் தொடங்கியது. அந்த இரவு தனித்துவமும் முக்கியத்துவமும் நிறைந்த இரவாகும். அறிவு, ஞானம் தொடர்பான விவகாரங்கள் குறித்தும் உலகத்தின் வெற்றியும் வளமும் இருக்கின்ற விவகாரங்கள் குறித்தும் தீர்மானிக்கப்படுகின்ற இரவும் அதுதான். உலக விவகாரங்கள் குறித்து முடிவெடுக்கப்படுகின்ற இரவும் அதுதான். குர்ஆன் அருளப்படத் தொடங்கிய இரவு

சாதாரணமான இரவாக இருக்க முடியாது.

ஆயிரம் மாதங்களைக் காட்டிலும் சிறப்பான இரவுதான் அது. ஆயிரம் மாதங்களில் நடக்காத பணி - மனிதனுக்கு வளத்தையும் நலத்தையும் சேர்க்கின்ற பணி - இந்த இரவில் நடந்தது. இந்த இரவில் வானவர்களும் ரூஹுல் அமீனும் தம்முடைய இறைவனின் கட்டளையுடன் பூமியில் இறங்குகின்றார்கள். (அத்தியாயம் அல்கத்ரு, அத்தியாயம் அத்துகான் 3-5 ஆகியவற்றைப் பாருங்கள்)

  1. ரமளான் மாதத்தில் பகலில் நோன்பு நோற்பது கடமையாகும். இரவில் தராவீஹ் தொழுகைகளை நிறைவேற்றுவதும் அதிக மதிகமாக இறைவனின் அவையில் நிற்பதும் ஃபர்ளான கடமை இல்லையெனினும் அது இறைவனுக்கு மிகவும் விருப்பமான அறம் ஆகும்.
  2. நோன்பின் மாதம்தான் ரமளான். உலகம் முழுவதும் முஸ்லிம்கள் அனைவரும்

ஒன்றாக இந்த மாதத்தில் நோன்பு நோற்கின்றார்கள். இவ்வாறாக ஒரு தனிப்பட்ட வழிபாடு கூட்டு வழிபாடாக வடிவெடுத்துவிடுகின்றது. மக்கள் தனித்தனியாக நோன்பு நோற்பதில் கிடைக்கின்ற ஆன்மிக, தார்மிக பலன்களும் நன்மைகளும் எல்லோரும் ஒன்று சேர்ந்து நோன்பு நோற்கும் போது கணக்கிட இயலாத அளவுக்குப் பன்மடங்கு கூடிவிடுகின்றன.

ரமளான் சமூகச் சூழலையே மாற்றியமைத்து  விடுகின்றது.  நன்மைகள், நல்லறங்கள், மார்க்கப் பேணுதலான அறங்கள் நிறைந்ததாக சூழலே மாறிவிடுகின்றது. மனிதன் நோன்பு நோற்றுள்ள நிலையில் பாவங்களிலிருந்து முற்றாக விலகிவிடுகின்றான். வெட்கப்படுகின்றான். நன்மைகளிலும் நல்லறங்களிலும் ஈடுபடுவதில் மக்கள் போட்டி போடுகின்றார்கள். ஒருவரையொருவர் முந்திக்கொண்டு நற்செயல்களில் ஈடுபடுகின்றார்கள்.

ஏழை எளியவர்களின் துயர் துடைப்பதில் பேரார்வம் கொள்கின்றார்கள். மாதம் முழுக்க உணவுப் பொருள்களை விநியோகிப்பதில் ஆர்வம் கொள்கின்றார்கள். நன்மைகளின் தாக்கங்களும் அதிகரித்துவிடுகின்றன. பரக்கத் எனும் அருள்வளம் கூடிவிடுகின்றது. ஏனெனில் இந்த மாதத்தில் மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு நல்லறத்துக்கும் கணக்கிட முடியாத அளவுக்கு நற்கூலி வழங்குவதாக அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான்.

  1. இந்த மாதத்தில் மனிதன் பசி, தாகம் ஆகியவற்றின் சிரமங்களைச் சகித்துக் கொண்டு தன்னுடைய இச்சைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு இறைவனின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு வாழ்வதில் தனிக் கவனம் செலுத்துகின்றான். இறைவனின் பாதையில் நிலைத்திருப்பதற்குத் தேவையான பொறு மையையும் நிலைகுலையாத பண்பையும் தனக்குள் வளர்த்துக் கொள்வதற்கும், சத்தியப் பாதையில் எத்துணை துன்பங்களும் இடர்ப்பாடுகளும் வந்தாலும் அவற்றை எதிர்கொள்கின்ற பண்பை உருவாக்கிக் கொள்வதற்கும்அவன் கடுமையாக முயல்கின்றான்.
  2. நோன்பின் போது தம்முடைய சமுதாயச் சொந்தங்கள் மீதும் சகோதரர்கள் மீதும் தனிப்பரிவும் கனிவும் உருவாவது அவசியமாகும். பசியும் தாகமும் மிகைக்கின்ற போது பட்டினிக்கும் வறுமைக்கும் ஆளாகின்ற மனிதர்களின் தவிப்பை உணர வேண்டும். நபிகளார்(ஸல்) அளவிட முடியாத அளவுக்கு கனிவும் பரிவும் நிறைந்தவர்களாக ஆகிவிடுவார்கள். யாசிப்பவர் எவரும் வெறுங்கையோடு திரும்ப மாட்டார். கைதாகி இருந்தவர்களும் விடுவிக்கப்பட்டு விடுவார்கள்.
  3. வெளிப்படையான அருள்வளங்களும் ஆன்மிக அருள்கொடைகளும் எல்லாவகை யிலும் நிறைந்திருக்கின்ற மாதம்தான் இது.
  4. இந்த மாதம் நன்மைகளின் வசந்தத்தைக் கொண்டு வருகின்றது. நம்பிக்கையாளர்கள் இந்த மாதத்தில் அதிகமதிகமாக நற்செயல்களிலும் நல்லறங்களிலும் ஈடுபடுகின்றார்கள். இதன் காரணமாக ஒட்டுமொத்த சமூகச்

சூழலிலும் இறைவனின் தனிப் பெருங்கருணையும் தனிப் பெருங்கிருபையும் நிறைந்து விடுகின்றது. இது எங்கு போய் முடிகின்றது எனில் ரமளானின் தொடக்க நாள்கள் கடந்து விட்ட பிறகு நம்பிக்கையாளர்கள், இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்ற அடியார்களின் நிலைமை எப்படி ஆகிவிடுகின்றது எனில் இறைவன் அவர்களின் முந்தைய பாவங்களையும் பிழைகளையும் பொறுத்துக் கொண்டு மன்னித்தாக வேண்டிய நிலைக்கு ஆளாகிவிடுகின்றான்.

இந்த மாதத்தின் கடைசி நாள்களை அடைகின்ற வேளையில் இந்த அருள்வளம் மிக்க மாதத்திலிருந்து பயனீட்டிக் கொண்டவர்களின் வாழ்வில் எந்த அளவுக்கு புத்துணர்வு மேலோங்கிவிடுகின்றது எனில், இறைப்பற்றும் இறைவனையே முற்றாகச் சார்ந்திருக்கின்ற உணர்வும் எந்த அளவுக்கு அவர்களின் சிந்தையிலும் சொல்லிலும் செய லிலும் மிகைத்து விடுகின்றது எனில், அவர்கள் இறைவனின் தரப்பிலிருந்து ஈடேற்றம் பெற்றவர்களாக அறிவிக்கப்படுவதற்கான தகுதியை அடைந்துவிடுகின்றார்கள். இறைவன் அவர் களை நரகத்திலிருந்து விடுதலை செய்வதற் கான தீர்மானத்தை எடுத்துவிடுகின்றான்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்