மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • அன்பிற்குரிய சமரசத்தின் டிஜிட்டல் வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:
  • இதுநாள் வரைக்கும் சமரசத்தின் இணையத்தில் முற்றிலும் இலவசமாக நீங்கள் வாசித்து வந்தீர்கள். ஆனால் வருகின்ற ஏப்ரல் மாதத்திலிருந்து டிஜிட்டல் வாசிப்பிற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய சமரசம் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. விவரங்கள் விரைவாய் அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.
  • ஆகவே, இன்றுபோல் என்றும் ஒத்துழைப்பு வழங்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இஸ்லாம்

சகோதரர்களாய்த் திகழுங்கள்!
மௌலானா முஹம்மத் ஃபாரூக்கான் , டிசம்பர் 1-15 2022


1. இந்த நபிமொழி தெள்ளத் தெளிவானதாய், தீர்க்கமானதாய், திட்டவட்டமானதாய் இருக்கின்றது. முஸ்லிம்களுக்கு இடையிலான தொடர்புகளும் உறவுகளும் சகோதரர்களுக்கு இடையிலான தொடர்பையும் உறவையும் போன்றதாகவே இருத்தல் வேண்டும். முஸ்லிம்கள் ஒருவர் மற்றவரின் கண்ணியம், மானம், மரியாதை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே இயங்க வேண்டும். தம்முடைய எந்தவொரு சகோதரருக்கும் எந்தவிதமான இழப்பும் ஊறும் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் அவர் விழிப்பாக, கண்ணும் கருத்துமாக இருத்தல் வேண்டும்.

2. இறையச்சம் உண்மையில் இதயத்தோடு தொடர்புடையதாகும். அது வெறுமனே சில புறத்தோற்ற அடையாளங்களோடும் குறிப்பிட்ட சில செயல்களோடும் மட்டுமே தொடர்புடையதல்ல. அதற்கு மாறாக முஸ்லிம்கள் தங்களின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் சீர்படுத்திக் கொள்வதில் எந்நேரமும் கவனம் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

3. எந்தவொரு மனிதரும் நல்லவராக, மக்களுக்கு நன்மை அளிப்பவராக இருக்கவே விரும்புவார். அதற்குப் பதிலாக தீயவராகிவிட எவருமே விரும்ப மாட்டார். இந்த நிலையில் ஒருவர் நல்லவராவதற்குப் பதிலாக தீயவராவதற்கான செயல்களில் வலிந்து ஈடுபடுகின்றார் எனில் அது மிகவும் வருத்தத்துக்குரியதாகும். "ஒருவர் தீயவராவதற்கு தம்முடைய சகோதரரைக் கேவலமாக நினைப்பதே போதுமானதாகும்; அவரிடம் வேறு எந்தவொரு தீமையும் இல்லையானாலும் சரியே' என்று நபிகளார்(ஸல்) எச்சரித்திருக்கின்றார்கள். அந்த மனிதர் தீயவராவதற்கு தம்முடைய சகோதரரைக் கேவலமாக நினைக்கின்ற அந்தக் கெட்ட எண்ணமே போதுமானதாகும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்