புல்டோசர் தீர்ப்பு?
ராஜஸ்தானின் பீவர் மாவட்டத்தில், ஐந்து இந்துச் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டிய குற்றச்சாட்டு தொடர்பாக மூன்று மைனர்கள் உட்பட ஏழு முஸ்லிம்களைக் கைது செய்துள்ளனர். பிப்ரவரி 16 அன்று விஜய்நகரில் பதிவு செய்யப்பட்ட மூன்று ஊஐகீகளைத் தொடர்ந்து இந்தக் கைது நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தை லவ் ஜிஹாத் வழக்கு என்று கூறி குற்றம்
சாட்டப்பட்டவர் மீது புல்டோசர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்துத்துவா குழுக்கள் கோரியுள்ளன.
அங்குள்ள குடும்பங்கள், மஸ்ஜிதுகளுக்கு எச்சரிக்கை அறிவிப்புகள் தரப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மூன்று நாள்களுக்குப் பிறகு, விஜய் நகர் நகராட்சி குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, அவர்களின் வீடுகளுக்கான உரிமை ஆவணங்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டது. பிப்ரவரி 20, 21 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்ட நோட்டீஸ்களில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படா விட்டால் அதிகாரிகள் சட்டவிரோத கட்டுமானங்களை இடித்துவிட்டு, குடும்பங்களிடமிருந்து செலவுகளை மீட்டெடுப்பார்கள் என்று எச்சரித்துள்ளது.
விளையாடும் வெறுப்பு அரசியல்
இந்தியா Vs பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் போது ரோஹித் சர்மா ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற கோஷத்தை எழுப்பியதாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து கோஷம் எழுப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக் கக் கோரி இந்துத்துவா அமைப்புகள் பேரணி நடத்தின. இதைத் தொடர்ந்து மகாராஷ்டி ராவின் மால்வன் நகராட்சி அதி காரிகள் பிப்ரவரி 24 அன்று ஒரு முஸ்லிம் ஸ்கிராப் வியாபாரியின் கடையைப் புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கினர். சிவசேனா MLA நிலேஷ் ராணே, இடிப்புக் காட்சிகளை X தளத்தில் பகிர்ந்து நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்தார்.
இடிபடும் உரிமைகள்
மும்பையின் சாகி நாகாவில், 90 அடி சாலையில் நீதிமன்றத் தடை உத்தரவு இருந்தபோதிலும், நிர்வாகம் ஒரு மஸ்ஜிதின் வாயில் உட்பட முஸ்லிம் களின் கடைகளை இடித்து வருகிறது.
ஆக்கிரமிப்புக் குற்றச்சாட்டு
சம்பல் மாவட்டத்திலுள்ள ஷாஹி ஜமா மஸ்ஜித் பொது நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக உபி அரசு குற்றம் சாட்டியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 16ஆம் நூற்றாண்டு மஸ்ஜிதுக்கு அருகிலுள்ள கிணறு தொடர்பாக மஸ்ஜித் குழு நீதிமன்றத்தில் தவறான புகைப்படங்களைச் சமர்ப்பித்ததாக உபி அரசு குற்றம் சாட்டியுள்ளது.
மஸ்ஜித் இந்துக் கோயிலின் மீது கட்டப்பட்டதாக இந்து மனுதாரர்கள் கூறுகின்றனர். மஸ்ஜித், கிணறு இரண்டும் பொது நிலத்தில் உள்ளன என்று அரசாங்கம் வாதிட்டது. ‘கிணறு பொதுக் கிணறு என்றும், மஸ்ஜிதுக்குள் (அல்லது) சர்ச்சைக்குரிய மதத் தளத் திற்குள் எங்கும் இல்லை என்றும் சமர்ப்பிக் கப்பட்டுள்ளது. கிணறு வரலாற்று ரீதியாக அனைத்து சமூகத்தினராலும் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
வணிகத் தடை
மகாராஷ்டிராவின் பதார்டி தாலுகாவில், உள்ளூர் கிராம மக்கள் கனிஃப்நாத் மந்திர் மத்தி யாத்திரையில் முஸ்லிம் வணிகர்கள் பங்கேற்பதைத் தடை செய்ய ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். முஸ்லிம் வணிகர்கள் தங்கள் மரபுகளைப் பின்பற்றுவதில்லை, இது அவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துகிறது என்று கிராம மக்கள் கூறுகின்றனர். யாத்திரை ஹோலி யில் தொடங்கி குடி பத்வாவில் முடிவடைகிறது. உள்ளூர் பழக்க வழக்கங்களின்படி யாத்திரைக்கு ஒரு மாதத்திற்கு முன்பு சிலைக்கு எண்ணெய் தடவப்படுகிறது. இந்த நேரத்தில், கிராம வாசிகள் வறுத்த உணவு, கொண்டாட்டங் களைத் தவிர்த்து துக்க காலத்தைக் கடைப்பிடிக்கின்றனர். ‘முஸ்லிம் வணிகர்கள் எங்கள் மரபுகளைப் பின்பற்றுவ தில்லை’ என்று கனிஃப்நாத் கோயில் அறக்கட்டøளயின் தலைவரும் கிராமத் தலைவருமான சஞ்சய் பாஜிராவ் மார்கட் கூறினார். கும்பமேளாவில் முஸ்லிம் வணிகர்கள் மீதான தடையுடன் இந்த முடிவை மார்கட் ஒப்பிட்டு, ‘கும்பமேளாவில் முஸ்லிம் வணிகர்கள் தடை செய்யப்படுவது போல, கனிஃப்நாத் யாத்திரையிலிருந்து அவர்களைத் தடை செய்ய முடிவு செய்துள்ளோம்’ என்று கூறினார்.
பரப்புரைக்குத் தடை
குர்ஆனை விநியோகித்ததற்காக ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரின் ராஜ்பாக் பகுதியில் மூன்று முஸ்லிம் பெண்கள் கைது செய்யப்பட்டனர். பிடிபி தலைவர் வாஹீத் பாரா இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, குர்ஆன் நீதியையும் குற்றமற்ற சமூகத்தையும் ஊக்குவிக்கிறது என்று கூறினார். நீதிமன்ற நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டாம் என்று அவர் காவல்துறையை வலியுறுத்தினார்.
போலிக் குற்றச்சாட்டில் இடிக்கப்பட்ட வீடு
பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷஃபீக் அன்சாரி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டார். புகார் அளித்த பத்து நாள்களுக்குப் பிறகு, அதிகாரிகள் <2 கோடி மதிப்புள்ள அவரது வீட்டை இடித்து, ஏழு பேர் கொண்ட அவரது குடும்பத்தை நிர்மூலமாக்கினர். 2024 பிப்ரவரி 14, அன்று, பாலியல் புகாரளித்த பெண்ணின் சாட்சியத்தில் முரண்பாடுகள், மருத்துவ, அறிவியல் சான்றுகள் முழுமையாக இல்லாததைக் காரணம் காட்டி, அன்சாரியை நீதிமன்றம் குற்றமற்றவர் என்று விடுவித்தது. இந்த வழக்கு பழிவாங்கும் நோக்கில் அந்தப் பெண் போலியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. முன்னாள் வார்டு கவுன்சிலரான அன்சாரியின் மனைவி, சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டை இடிக்க வழிவகுத்த ஒரு புகாரை முன்பு தாக்கல் செய்திருந்தார். இதன் காரணமாகவே அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஜும்ஆ தொழுகை நேரம் ரத்து
அசாமின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் தொழுகை நடத்த வெள்ளிக்கிழமைகளில் இரண்டு மணி நேர இடைவெளி வழங்கும் நீண்டகால நடைமுறை பாஜக அரசால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த முடிவு ஆகஸ்ட் 2023இல் சபாநாயகர் தலைமையிலான விதிகள் குழுவால் எடுக்கப்பட்டது, அது இப்போது நடைமுறைக்கு வந்தது. சட்டமன்றம் இப்போது வெள்ளிக் கிழமை உட்பட ஒவ்வொரு நாளும் காலை 9:30 மணி முதல் செயல்படும். அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின்(AIUDF) MLA ரஃபிகுல் இஸ்லாம், இந்த முடிவு பாஜகவின் பெரும்பான்மையால் இயக்கப்படுகிறது என்று கூறி ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.
அழிக்கப்படும் அடையாளங்கள்
பிப்ரவரி 22 அன்று, தக்ஷ் சவுத்ரி தலைமையிலான இந்து தேசியவாதிகள் குழு ஒன்று புது தில்லியில் உள்ள பாபர் சாலை தெரு அடையாளங்களைச் சேதப்படுத்தி, சிறுநீர் கழித்து, கருப்பு வண்ணம் அடித்து, சத்ரபதி சிவாஜி மார்க் என்று மறுபெயரிடும் சுவரொட்டிகளை வெளி யிட்டது. ‘சாவா’ திரைப் படத்தை மேற்கோள் காட்டி சவுத்ரி அந்தப் படம் தங்களைக் கோபப்படுத்தியதாகக் கூறி, பொது இடங்களில் இருந்து அனைத்து முகலாய ஆட்சியாளர்களின் பெயர்களையும் நீக்குமாறு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தார்.
வெறுப்புப் பேரணி
ஜனவரி 22 அன்று, பீகாரின் ஜமுய் நகரில், ராமர் மந்திரின் முதலாமாண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இந்து ஸ்வாபிமான் சங்கதன் ஒரு பேரணியை ஏற் பாடு செய்தது. அந்தப் பேரணியின் போது, பங்கேற்பாளர்கள் வெளிப்படையாக வாள்களையும் துப்பாக்கிகளையும் ஏந்திச் சென்றனர். காவல்துறையினரின் பாதுகாப் புடன் இது நடந்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெறுப்பாளார்கள்
வலது கை வேகப்பந்து வீச்சாளரான இந்திய கிரிக்கெட் வீரர் முஹம்மது சிராஜ், உம்ராவுக்காக சவுதி அரேபியாவிற்கு மேற்கொண்ட பயணத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்ததால், அவர் மீது இணையத்தில் வெறுப்பை உமிழ்ந்தனர். முஹம்மது சிராஜ் தனது சமூக ஊடகத் தளத்தில், அல்ஹம்துலில்லாஹ் (புகழ் அனைத்தும் இறைவனுக்கு) என்ற தலைப்புடன் இஹ்ராம் அணிந்து கஅபாவின் முன் நிற்கும் புகைப்படத்தை வலதுசாரி மதவெறியர்கள் பலர் கத்முல்லா, முல்ஹா போன்ற சொற்றொடர்களைக் கூறி ட்ரோல் செய்தனர், மேலும் பலர் அந்தப் பதிவின் கீழ் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற கோஷங்களை எழுதினர்.
வெள்ள ஜிஹாத்?!
மேகாலயா அறிவியல், தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (USTM) உரிமையாளரும், மூத்த சமூக சேவகருமான மஹ்ஃபூல் ஹக், USTM நிறுவனத்திற்கு எதிரான தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து குவ ஹாத்தியில் உள்ள அவரது இல்லத்தில் அசாம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, USTM‘வெள்ள ஜிஹாதில்’ ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டினார். குவஹாத்தியில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளே காரணம் என்ற குற்றச்சாட்டு அடிப்படையற்றவை. க்குகூM போலி பட்டங்களை விநியோகிப்பதாகவும், ஹோக் மோசடி யாக Oஆஇ சான்றிதழைப் பெற்றதாகவும் சர்மா முன்பு குற்றம் சாட்டியிருந்தார். இருப்பினும், இந்தக் கூற்றுகள் எதுவும் நம்பகமான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை. பல்கலைக்கழகம் அனைத்து குற்றச்சாட்டுகளையும் கடுமையாக மறுத் துள்ளது.
பொய் வழக்கு
அல்கொய்தாவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மூன்று முஸ்லிம்களுக்கு எதிரான ஆதாரங்களை அரசுத் தரப்பு வழங்கத் தவறியதால், ஜாம் ஷெட்பூர் நீதிமன்றம் அவர்களை விடுவித்தது. ஜாம்ஷெட்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி விமலேஷ் குமார் சஹாய் இந்திய துணைக்கண்டத்தில் அல்கொய்தா என்ற அமைப்புடன் தொடர்புடையதாகக் கூறி 2016இல் கைது செய்யப்பட்ட மௌலானா கலிமுதீன் முஜாஹித், முஹம்மது அப்துல் ரஹ்மான் அலீ கான் என்ற மௌலானா மன்சூர் என்ற கட்டாக்கி, அப்துல் ஷாமி ஆகிய மூன்று முஸ்லிம்களை, அரசு தரப்பு அவர்களின் பங்களிப்பிற்கான எந்த ஆதாரத்தையும் வழங்கத் தவறியதால், விடுவித்தார்.
2016ஆம் ஆண்டில், தட்கிடிஹ் பகுதியைச் சேர்ந்த ஜாம்ஷெட்பூர் வாசியான அஹ்மது மசூத் அக்ரம் ஷேக் என்ற மசூத் மீது டெல்லி சிறப்பு அதிரடிப்படையின்(குகூஊ) ‘தகவலின்’ அடிப்படையில் பிஸ்டுபூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை(RTI) பதிவு செய்தது. டெல்லி சிறப்பு அதிரடிப்படை 2019 ஜனவரியில் ஹரியானாவின் மேவாத்திலிருந்து முஹம்மது ஷமியையும், 2015 டிசம்பரில் கட்டாக்கிலிருந்து கட்டாக்கியையும் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.