ஔரங்கஜேப் மீது பரப்பப்படும் வன்மம்
மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள முகலாயப் பேரரசர் ஔரங்கஜேபின் மண்ணறையைப் பராமரிப்பதற்காக இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை (ASI) செலவிட்ட நிதி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஹைதராபாத் பாஜக MLA டி.ராஜா சிங் கோரிக்கை விடுத்துள்ளார். கோயில் இடிப்பு, இந்து மன்னர்கள் கொலை, இந்திய கலாச்சாரத்திற்கு எதிரான ஆட்சியாளரின் மண்ணறையைப் பாதுகாக்க பொது நிதி ஏன் பயன்படுத்தப்படுகிறது? என்று சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
முகலாய ஆட்சியாளர் ஔரங்கஜேபின் மண்ணறையை மகாராஷ்டிராவில் இருந்து அகற்ற வேண்டும் என்று திரிம்பகேஸ்வரைச் சேர்ந்த தந்திரபீததீஷ்வர் அனிகேத் சாஸ்திரி மகாராஜ் கோரிக்கை வைத்துள்ளார். இந்தக் கோரிக்கைக்கு விஸ்வ இந்து பரிஷத், ஙஏக, பஜ்ரங் தளம் போன்ற இந்து அமைப்புகளின் ஆதரவு கிடைத்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான சாவா திரைப்படத்தில் ஔரங்கஜேபை மிக மோசமாகச் சித்திரித்ததன் விளைவாக இந்தப் பிரச்னை மகாராஷ்டிராவில் சூடுபிடித்துள்ளது. இதனையொட்டிய போராட்டத்தில் நாக்பூரில் மோதல், தீ வைப்பு சம்பவங்கள் காவல் துறையினர் தடியடி நடைபெற்றன.
தொடரும் பசுக்குண்டர்களின் அராஜகம்
மார்ச் 14 அன்று, மகாராஷ்டிராவின் தாராஷிவ் என்ற இடத்தில், பசுக் குண்டர்கள் காவல்துறையினருடன் சேர்ந்து, கால்நடைகளை ஏற்றிச் சென்ற ஒரு லாரியை வழிமறித்தனர். இறைச்சிக்காக விலங்குகளைக் கொண்டு சென்ற குற்றச்சாட்டின் பேரில் ஓட்டுநரைக் கைது செய்தனர்.
பிரிவினை வாதம்
சார்தாம் யாத்திரையின் முக்கியத் தலமான கேதார்நாத்துக்கு இந்துக்கள் அல்லாதவர்கள் செல்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று பாஜக Mஃஅ ஆஷா நௌடியல் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். நௌடியலின் கருத்துகள் பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத் ஆகிய நான்கு தலங்களை இந்துக்கள் அல்லாதவர்கள் பார்வையிடுவதைத் தடை செய்ய பரிந்துரைக்கிறது.
சமூகத்தைப் பிரிக்க பாஜக மதப் பிரச்னைகளைப் பயன்படுத்துவதாக காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் சூர்யகாந்த் தஸ்மானா குற்றம் சாட்டினார். மகா கும்பமேளா, ஹோலி, ஜும்மே கி நமாஸ், சார்தாம் யாத்திரை போன்ற மத நிகழ்வுகளில் முஸ்லிம் சமூகத்தை பாஜ கட்சி மீண்டும் மீண்டும் குறிவைப்பதை அவர் விமர்சித்தார்.
மறுக்கப்படும் வழிபாட்டு உரிமை
உத்தரப்பிரதேச காவல்துறையினரால் 22 வயது மாணவர் ஒருவர் IIMT பல்கலைக்கழக வளாகத்தில் திறந்தவெளியில் தொழுகை நடத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்டார். பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 50 மாணவர்கள் தொழுகை நடத்துவதைக் காட்டும் வீடியோ தொடர்பாக உள்ளூர் இந்து சமூகங்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, காலித் பிரதான் என்ற மாணவர் கைது செய்யப்பட்டார். பல்கலைக்கழக நிர்வாகம் காலித் பிரதான் உள்ளிட்ட மூன்று பாதுகாப்புப் பணியாளர்களை இடைநீக்கம் செய்துள்ளது.
துன்புறுத்தப்படும் முஸ்லிம்கள்
மார்ச் 13 அன்று உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில் உள்ள கோட்டாபாக்கில் சச் கே சாத் சமிதியின் தலைவரான பிரேந்திர சிங், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் வியாபாரிக்கு ஆதார் அட்டை அல்லது காவல்துறை பதிவு இல்லை என்று கூறி துன்புறுத்தினார். பொய்யான சாக்குப் போக்கின் கீழ் அந்த வியாபாரி அந்தப் பகுதிக்குள் நுழைந்ததாக சிங் குற்றம் சாட்டினார். ‘ஜெய் கல்கி’, ‘ஜெய் உத்தரகாண்ட்’ என்று கோஷமிடும் போது காவல்துறையில் பதிவு செய்ய சத்தியம் செய்யுமாறு கட்டாயப்படுத்தினார்.
பெண்களை வதைக்கும் காவல்துறை
குல்காம் மாவட்டத்தில் பழங்குடியின குஜ்ஜார் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் சகோதரர்கள் மர்மமான முறையில் இறந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்த பெண் குடும்ப உறுப்பினர்களை காஷ்மீர் காவல்துறை அதிகாரி ஒருவர் உதைக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 2025 மார்ச் 16 ஆம் நாள் நடந்த இந்தச் சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் காவல்துறை ஐஜிபி, ‘சம்பவம், அதிகாரியின் நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகளை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். டிஐஜி எஸ்கேஆர் விசாரணை நடத்தி 10 நாள்களுக்குள் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பார்’ என்று கூறினார்.
முஸ்லிம் தொழிலாளர்கள் படுகொலை
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த முஸ்லிம் தொழிலாளர்கள் பெங்களூருவில் பாலியல் வன்கொடுமை, உடல் ரீதியான தாக்குதல் உள்ளிட்ட வன்முறைகளை எதிர்கொண்டதாகக் கூறப்படுகிறது. அகில இந்திய ஷ்ராமிக் ஸ்வராஜ் மையம்(அஐஇகுகு) தகவலின் படி, 13 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். நான்கு மைனர் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். நான்கு பேர் தாக்கப்பட்டனர். இந்தத் தொழிலாளர்களுக்கு நீதி, பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மேற்கு வங்க அரசாங்கத்தை அந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
முர்ஷிதாபாத், மால்டா போன்ற மாவட்டங்களில் இருந்து பல தொழிலாளர்கள் வேலைவாய்ப்புக்காக பிற மாநிலங்களுக்குக் குடி பெயர்கின்றனர். இருப்பினும் மேற்கு வங்கத்திற்கு வெளியே வேலை செய்யும் போது அவர்கள் பெரும்பாலும் வன்முறை, துன்புறுத்தலை எதிர்கொள்கிறார்கள் என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. மனித உரிமைகள் அமைப்பான அகஈகீஇன் செயலாளர் ரஞ்சித் சுர், மாநில அரசைக் கண்டித்து, ‘வங்காளத்தின் தொழிலாளர் படையில் ஒரு பெரிய பகுதியினர் இங்கு வேலை வாய்ப்புகள் இல்லாததால் மாநிலத்திற்கு வெளியே வேலை செய்கிறார்கள். அண்மையில் சில பகுதிகளில் வங்காள மொழி பேசுவதற்காக அவர்கள் குறிவைக்கப்பட்டு ‘வங்காளதேசிகள்’ என்று முத்திரை குத்தப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவங்களில் பல பாஜக ஆளும் மாநிலங்களில் நிகழ்கின்றன. இதுபோன்ற ஜனநாயக விரோத வன்முறைச் செயல்களை ஒரு ஜனநாயக நாட்டில் பொறுத்துக்கொள்ளக்கூடாது’ என்று கூறினார்.
ஹோலி கொண்டாட்டக் கொலை
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவில் சனிக்கிழமை மஸ்ஜிதுக்குச் செல்லும் வழியில் தாக்கப்பட்டதில் 48 வயதுடைய ஷரீஃப் என்பவர் உயிரிழந்தார். ஹோலி பண்டிகையின் போது, அவரது எதிர்ப்புகளை மீறி ஒரு குழு அவர் மீது வண்ணங்களை வீசியதாகக் கூறப்பட்டதால் இந்த மோதல் தொடங்கியது. மார்ச் 14 அன்று, காலை 11 மணியளவில் ஷரீஃப் வேலைக்குச் சென்றார். காஷிஃப் அலீ சராய் சுங்கி பவர் ஹவுஸ் வழியாகச் சென்றபோது, ஹோலியைக் கொண்டாடிய ஒரு குழு அவர் மீது வண்ணங்களைத் தெளித்தது.
ஷரீஃப் எதிர்த்தபோது, அவர்கள் மீண்டும் அதே செயலை மீண்டும் செய்தனர். இது வன்முறையாக மாறியது. அருகில் இருந்த சிலர் தலையிட்டு மேடையில் அமர உதவுவதற்கு முன்பு, அவருக்கு தண்ணீர் வழங்கினர். இருப்பினும் சில நிமிடங்களுக்குப் பிறகு அவர் சரிந்து விழுந்து இறந்தார். தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்ட தாகக் கூறப்படுகிறது. ஷரீஃபின் மகள் புஷ்ரா, தனது தந்தையை அடித்தது மட்டுமல்லாமல், <5,000 கொள்ளையடித்ததாகவும் குற்றம் சாட்டினார்.
தொடரும் வெறுப்புப் படுகொலைகள்
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் வெள்ளிக்கிழமை அதிகாலை பைக்கில் வந்த இரண்டு தாக்குதல்காரர்கள் ஹரிஸ் என்ற 25 வயது முஸ்லிமைச் சுட்டுக் கொன்றனர். நள்ளிரவு கிரிக்கெட் போட்டி விளையாடிவிட்டு ரமளான் நோன்பு வைப்பதற்காக ஸஹர் செய்ய வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அதிகாலை 3:15 மணியளவில் அவர் தாக்கப்பட்டார்.
தாக்குதல்காரர்கள் அவர் மீது பலமுறை சுட்டனர். பின்னர் அவர் கீழே விழுந்தார். சிசிடிவியில் பதிவான இந்த பயங்கரமான தாக்குதலில், தாக்குதல்காரர்களில் ஒருவர் தடுமாறி கீழே விழுந்ததால், ஹரிஸின் நண்பர் தப்பிக்க முடிந்தது. மற்றொரு தாக்குதல்காரர் தனது பைக்கில் இருந்து இறங்கி மீண்டும் மூன்று முறை சுட்டுவிட்டு அந்த இடத்திலிருந்து தப்பிக்க, இரண்டாவது தாக்குதல்காரரும் அவர் மீது சுட்டார். தாக்குதலில் இருந்து ஹரிஸ் தப்பிக்காமல் இருக்க குறைந்தது அரை டஜன் தோட்டாக்களை தாக்குதல் நடத்தியவர்கள் பயன்படுத்தினர்.
வலைதள ஆபாச வெறுப்பு
பல இந்துத்துவாக் குழுக்கள் சமூக ஊடகத் தளங்களில் முஸ்லிம் பெண்களைக் குறி வைத்து அஐ உருவாக்கிய ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள், பதிவுகளைப் பரப்பி வருகின்றன. ‘இன்ஸ்டாகிராமில் இது போன்ற குறைந்தது 250 பக்கங்கள் இருப்பதாகவும், அவற்றில் இந்து அடையாளங்களை உடைய ஆண்கள் புர்கா அணிந்த முஸ்லிம் பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற அஐ படங்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது ‘முஸ்லிம் பெண்கள் பாலியல் ரீதியாக விரக்தி அடைந்துள்ளனர், இதை மறைக்க அவர்கள் புர்கா அணிகிறார்கள்’ என்று பல கணக்குகள் முஸ்லிம் பெண்கள் குறித்த ஆபாச கருத்துக்களைப் பதிவிடுகின்றன.
இந்துத்துவாவாதிகள் இவ்வாறு முஸ்லிம் பெண்களை இழிவு படுத்துவது முதல் முறையல்ல 2021ஆம் ஆண்டில் ‘சுல்லி டீல்கள்’ ‘புள்ளி டீல்ஸ்’ ஆகிய ஆப்கள் மூலம் முஸ்லிம் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாகப் பதிவு செய்து ஏலத்தில் விடுவதாக இஸ்லாமிய வெறுப்பைக் கக்கினர். இது மட்டுமன்றி ‘பக்வா லவ் டிரப்’ என்ற திட்டத்தின் மூலம் முஸ்லிம் பெண்களைப் போலியாகக் காதலித்து இந்து மதத்திற்கு மதமாற்றவும், அவர்களைப் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்தவும் செய்தனர்.
தார்ப்பாயால் மூடப்படும் பள்ளிவாசல்கள்
அன்பைப் பரப்புவதற்காகக் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை இப்போது முஸ்லிம்களின் மீது வெறுப்பைப் பரப்பப் பயன்படுத்தப்படுகிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய சம்பலின் காவல் துணை கண்காணிப்பாளர் அனுஜ் குமார் சவுத்ரி கூறியதாவது, ‘ஹோலி வண்ணங்கள் தெளிக்கப்படுவதில் முஸ்லிம்கள் சங்கடமாக உணர்ந்தால் அவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். ஏனெனில் ஹோலி பண்டிகை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வருகிறது, அதே நேரத்தில் ஜும்ஆ தொழுகை ஆண்டுக்கு 52 முறை நடைபெறுகிறது.’
இது மட்டுமின்றி உ.பியில் உள்ள பெரும்பாலான பள்ளிவாசல்கள் பெரிய தார்ப்பாய் மூலம் மூடப்பட்டது. முஸ்லிம்களின் புனித மாதமான ரமளான் மாதத்தின் ஜும்ஆ தொழுகை நிறைய இடங்களில் தாமதமாக நடைபெற்றது. சில இடங்களில் நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இது மட்டுமன்றி நாடு முழுக்க பல குற்றச் செயல்கள் நடைபெற்றன. பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ஹோலி கொண்டாட மறுத்த பலர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.
அழிக்கப்படும் சொத்துகள்
உத்தரகாண்டில் கடந்த சில நாள்களாக முசோரி டேராடூன் மேம்பாட்டு ஆணையம்(MDDA), மாவட்ட அதிகாரிகள் சேர்ந்து சட்ட விரோதமாகக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி நான்கு மதரசாக்கள், ஒரு மஸ்ஜிதுக்குச் சீல் வைத்தனர். உத்தரகாண்டில் தொடர்ச்சியாக முஸ்லிம் களின் சொத்துகள் குறிவைக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன.